Sep 9, 2010

ஒஸோ என்னை முழு முட்டாள் ஆக்கிய கதை

இந்த மனிதரை படிக்க ஆரம்பித்து இத்தோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எல்லாம் புரிந்தது போல சில நாளும் எதுவும் புரியாதது போல பல நாளும் ஆனது தான் மிச்சம். ஆம் இந்த மனிதர் எதிர்பார்த்ததும் அதுதான் போல. பெரியவர்கள் சொல்வதை எல்லாம் வாய் முடி கேட்ட காலம் போய் எதிர் கேள்விகளால் நான் அவர்களுக்கு முட்டாள் ஆனது தான் மிச்சம். ஆனாலும் ஒரு மன நிறைவு இருக்க தான் செய்கிறது. வாழும் போதும் வீழும் போதும் நானாகவே இருப்பேனே. அது போதும்.

வேலையோடு விளையாடு!!!

கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

நன்றி
ஒஸோ-தமிழ்

Sep 5, 2010

ஜாதி

இன்று வரை எனக்கு புரியாத விசயம் அது. அதை தெரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. மனிதர்களை பிரித்தது கடவுள் தான் ஏன்று நினைக்கும் முட்டாள்களுடன் வாழ வெட்கமாகத்தான் இருக்கிறது. இது ஏதோ ஒரு சமயத்திற்க்கும் மட்டும் சொந்தமான விசயம் அல்ல. உலகில் உள்ள எல்லா பிரிவுகளிலும் இது இருந்தாலும் அதை மிக துல்லியமாக செயல் படுத்தியது நாம் தான். இதை ஒழிக்க முடியும் என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது போல் தோன்றுகிறது. நாம் எப்பொது இந்த முட்டாள்தனத்தை ஒழிக்க போகிறோம் என்று புரியவில்லை ?

காதல்

இது உண்மையிலே காதல் தானா!
துக்கம் இல்லா காலமிது.
அவளின் குரலே தாலாட்டான காலமிது,
அவளின் குரல் கேட்க காத்திருக்கும் காலமிது,
காதல் காத்திருப்பது சரிதானோ!

Aug 8, 2010

என்னை பற்றி

என்னை பற்றி பெற்றி பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லை. இது ஒரு முட்டாளின் உளரல் மட்டுமே. நான் ஜிசசையும் ரமணரையும் ஒரே தளத்தில் இருந்தவர்கள் என்று கருதும் ஒரு முட்டாள். ஓசோவின் படைப்புகள் அவ்வபோது படிப்பவனும் கூட. ஆனாலும் வாழ்க்கையை என் பாணியில் பார்க்க விரும்புபவன். வாழ்க்கை வாழ மட்டுமே அதில் சமுகம் விதிக்கும் கட்டுபாடுகள் முட்டாள் தனமானவை என்று கருதுகிறேன். வாழ்க்கை முழுமையாக அணுபவிக்க வேண்டும் அதன் ஒவ்வொரு தருணமும் முக்கியமானது என்பதை புரிநதவன். இனி வரும் பதிவுகளில் மேலும் பேசுகிறேன்.